குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை.. குடும்பத்தைக் கைது செய்ய உறவினர்கள் ஆர்பாட்டம்!!

ஆடுதுறை அருகே குடும்பத் தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை.. குடும்பத்தைக் கைது செய்ய உறவினர்கள் ஆர்பாட்டம்!!

சம்மந்தப்பட்டவர்கள் கதை:

தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி(வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதன் காரணமாக மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த இரண்டு தினங்கள் முன்பு ராஜகுரு தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்துமதி தூக்கு மாட்டி தற்கொலை:

இந்நிலையில், நேற்று  வீட்டில் தனி அறையில் இந்துமதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்துமதியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்:

இந்நிலையில், இன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட இந்துமதியின் உறவினர்கள் இந்துமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி 50க்கும் மேற்பட்டோர் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திருவிடைமருதூர் காவல்துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.