பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் காதல் வலை வீசிய இளைஞர் கைது

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் காதல் வலை வீசிய காரைக்காலை சேர்ந்த இளைஞரை, கோட்டுச்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் காதல் வலை வீசிய இளைஞர் கைது

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அருகே வரிச்சிக்குடியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் மணிமாறன்(27). இவரது உறவினரான 16 வயது சிறுமி ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண்ணை, மணிமாறன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். மேலும் வாட்சப் உள்ளிட்டவைகளில் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அந்த சிறுமி உனக்கு சித்தப்பா முறை வேண்டும். எனவே இதுபோல் விஷயத்தை விட்டுவிடு என பல முறை கூறி எச்சரித்துள்ளனர். மேலும் பெண்ணின் உறவினர்கள் மூலமும் கண்டித்துள்ளனர். ஆனால் மணிமாறன் கேட்காமல் தொடர்ந்து காதல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய்மாமன் கிருஷ்ணன், கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில்  கோட்டுச்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.