மது அருந்தும்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் அடித்து கொலை...!

மது அருந்தும்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் அடித்து கொலை...!

கிருஷ்ணகிரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேன்கனிகோட்டை அருகேயுள்ள கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சிலருடன் இணைந்து மயான பகுதியில் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சிலர் பழனியை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.