இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு...! கொலையா என்ற கோணத்தில் விசாரணை...!

இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு...! கொலையா என்ற கோணத்தில்  விசாரணை...!

கோவை டாடாபாத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகலபிரியா (26) என்பவர் உதவி லேப் டெக்னீசயனாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கோவை ரத்தினபுரியில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில் குடியிருப்பு ஒன்றின் அறையில் வாடகைக்கு தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்துள்ளனர்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மேகலபிரியா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ரத்தினபுரி போலீசார் மேகலபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மேகலபிரியா தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலையா என்ற கோணத்தில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரத்தினபுரி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : வருகிற 18 - ஆம் தேதி வரை விமான சேவை ரத்து...! எந்த ஊருக்கு தெரியுமா...?