பொய் குற்றம் சுமந்துறாங்க யுவர் ஹானர்.. நீதிமன்றத்தில் இளைஞர் சரண்!!

பொய் குற்றம் சுமந்துறாங்க யுவர் ஹானர்.. நீதிமன்றத்தில் இளைஞர் சரண்!!

பரமக்குடி அருகே நான்கு பேர் அரிவாளால் தாக்கப்பட்ட வழக்கில், தன் மீது பொய்யாக குற்றம் சாட்டுவதாகக் கூறி இளைஞர் ஒருவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒருவரைக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை, மர்ம நபர்கள் 10 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த வழக்கில்,  மதுரையைச் சேர்ந்த சபாரத்தினம் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தன் மீது பொய் வழக்கு போட காவல்துறையினர் தன்னைத் தேடுவதாக கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். மேலும், தனக்கு பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்  வரும்  27ம் தேதி வரை சபாரத்தினத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.