டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்: 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது ...

டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்: 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது ...

டெல்லி பாபா நகர் ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகே உள்ள வீட்டின் வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்தாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.இது குறித்து கூறிய காவல்துறையினர், இனிப்பு வாங்கி தருவதாக கூறி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தையை அந்த நபர் அழைத்து சென்றதாக கூறினார்.

இந்த கொடூர சம்பவத்தை செய்த நபர் பாபா நகர் ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நபர் என்று அந்த குழந்தை பெற்றோரிடம் கூறியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.