இளைஞர் தலை துண்டித்து படுகொலை... முன்விரோதம் காரணமாக கொடூரம்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் தலை துண்டித்து படுகொலை... முன்விரோதம் காரணமாக கொடூரம்...
கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார். பெயிண்டரான இவர், டீ குடிப்பதற்காக வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மந்தித்தோப்பு அருகே மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்ட நிலை கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.