மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை : தமிழக அரசு!

மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை : தமிழக அரசு!

மேல்மருவத்தூர் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் இருந்தால் விரைவில் அகற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள கீழ் மருவத்தூர் ஏரி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரியையும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்காக கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் போன்ற இடங்களுக்கு செல்லும் வழிகளுக்காக முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும்  இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ப்ளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, மேல்மருவத்தூர் கோயிலை ஒட்டிய நெடுஞ்சாலையும், நீர்நிலையும் அளவீடுகள் செய்யப்படும் என்றும், அவற்றில் ஏதேனும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

அதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

இதையும் படிக்க: கட்சி பிரமுகரை முடிக்க திட்டம்: பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது!!