ஊர் சுற்ற வராத காதலியை கத்தியால் குத்திய காதலன்…  

ஆந்திராவில் ஊர் சுற்ற வராத காதலியை சாலையில் வைத்து இளைஞர் கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் சுற்ற வராத காதலியை கத்தியால் குத்திய காதலன்…   

ஆந்திராவில் ஊர் சுற்ற வராத காதலியை சாலையில் வைத்து இளைஞர் கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், நரசராவ் பேட்டா காவல் எல்லைக்குட்பட்ட கல்லூரியில் ரம்யா என்பவர் பி.டெக் படித்து வந்துள்ளார். இவரும் சசி கிருஷ்ணா என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி ரம்யா, சசி கிருஷ்ணாவை காதலித்தாலும், வெளியே ஊர் சுற்றுவதை விரும்பவில்லை. இதனையடுத்து சசி கிருஷ்ணா ஊர் சுற்ற பலமுறை அழைத்தும்  ரம்யா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசி கிருஷ்ணா, சாலையில் ரம்யாவிடம் பேசி கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

இதனை கண்ட பொதுமக்கள் யாரும் தடுக்க வராததால் ரம்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணை குத்தி கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சசி கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.