பீருக்குள் கிடந்த காலண்டர் பேப்பர்! மதுபிரியர்கள் அதிர்ச்சி!!!

பீருக்குள் கிடந்த காலண்டர் பேப்பர்! மதுபிரியர்கள் அதிர்ச்சி!!!

புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பீர் பாட்டிலில் காகிதம் இருந்ததால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரியின் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான பார்  உள்ளது. இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர். அவர்கள் வாங்கிய 2 பீருக்கு சலுகையாக  ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல், இதனை வெயியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அந்த கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே பீர் பாட்டிலில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க:பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலின் பதில்!