ஐ எஃப் எஸ் நிதிநிறுவனம் மோசடி: விரைவில் பணம் வழங்கப்படும்! 

ஐ எஃப் எஸ் நிதிநிறுவனம் மோசடி: விரைவில் பணம் வழங்கப்படும்! 

சென்னை: ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இயக்குநா் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டுள்ளாா்.

வேலூரை தலைமையாக கொண்ட ஐ எஃப் எஸ் நிறுவனம், தமிழ் நாட்டில் பல இடங்களில் அதன் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், மக்களிடம் அதிகம் வட்டி தருவதாக கூறி மக்களிடம் பல ஆயிரம் கோடிகள் வசூலித்தது. இது போலவே, கிண்டியில் உள்ள கிளையிலும் நடந்துள்ளது. மக்கள்  செய்யும் பணத்திற்கு 10 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 84 ஆயிரம் பேரிடம் ரூ 5 ஆயிரத்து 900 கோடி வசூலித்துள்ளது.

ஆரம்பத்தில் மக்களிடம் வட்டி தொகையை சரியாக வழங்கி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மக்களிடம் வட்டி மற்றும் அசல் தொகையினை மக்களிடம் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதில் சந்தேகமடைந்த மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெரிய அளவில் நடந்துள்ள பொருளாதார மோசடி என்பதால் அந்த வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த காவலர்கள், ஐ எஃப் எஸ்  நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் லட்சுமி நாராயணன் , வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்தனன் உட்பட 10 இயக்குனர்கள் உட்பட மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 6 முக்கிய ஏஜெண்டுகள் சிக்கிய நிலையில், 5 பங்குதாரர்கள் தப்பியுள்ளார்கள்.

பின்னர், ரூ 1.14 கோடி ரொக்கம், 791 வாங்கி கணக்குகளில் இருந்த ரூ 121 கோடி பணமும், ரூ 39 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இயக்குநா் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டுள்ளாா். அதில் சட்டரீதியான போராட்டங்கள் மூலம் வழக்கை எதிா்கொண்டு, விரைவில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படும் என தொிவித்துள்ளாா். 

தற்போது, அந்நிறுவனத்தின் இயக்குனர் ஆடியோ வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பினை, அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: தேவதைகளாக மாறிய பெண் காவலர்கள்: நெகிழ வைத்த நிகழ்வு!