டெல்லி விமான நிலையத்தில் 15 கோடி மதிப்பிலான ஒரு கிலோ கொகெயின் பறிமுதல்:

டெல்லி விமான நிலையத்தில் 15 கோடி மதிப்பிலான ஒரு கிலோ கொகெயின் பறிமுதல்:

டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோவுக்கு அதிகமான கோக்கையின் போதை பொருளை ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். 


இந்திய தம்பதியிடம் 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்: 

முன்னதாக, கடந்த 13 ம் தேதி டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய தம்பதியிடம் சோதனை நடத்தியதில், அவர்கள் வைத்திருந்த இரண்டு பெட்டிகளில் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 45 கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். 

கோக்கையின் போதை பொருள் பறிமுதல் : 

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த பெண், அடிஸ் அபாபாவிலிருந்து டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தவர் தனது செருப்புகளில் போதை பொருளை மறைத்து வைத்திருந்தார். அவரிடம் இருந்து 15 கோடி ருபாய் மதிப்புள்ள 1015 கிராம் கோகைன் போதை பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.