கொலை மிரட்டல் விடுக்கும் நில அபகரிப்பு கும்பல்...போலீசில் புகார் அளித்த தம்பதி!

கொலை மிரட்டல் விடுக்கும் நில அபகரிப்பு கும்பல்...போலீசில் புகார் அளித்த தம்பதி!

நிலத்தை அபகரிக்க கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். 

மணலி புது நகரையடுத்த ஆண்டார் குப்பத்தில் முருகன் என்பவர் தனது மனைவி சசிகலாவுடன்  டீ  வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் புதிதாக  வீட்டு மனை வாங்கினர்.

இந்த நிலையில் தேவன் என்பவர் முருகன் அமைத்திருந்த வேலிகளைப் பிடுங்கி எரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. தேவன் அடியாட்களை அழைத்து  வந்து  15 நாட்களுக்குள் இடத்தைக் காலி செய்யாவிட்டால் உயிரோடு விடமாட்டோம் என்று முருகன் தம்பதியருக்கு கொலை மிரட்டல்  விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த கொலை மிரட்டல் குறித்து மணலி காவல் நிலையத்தில் முருகன் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். மேலும் கொலை மிரட்டலுக்கு பயந்து மன உளைச்சலுக்குள்ளான முருகன் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.