"இது என் ஏரியா.. எந்த கடை-ல, என்ன வாங்குனாலும் காசு குடுக்க மாட்டேன்": மதுப்பிரியர் அட்டூழியம்!! 

"இது என் ஏரியா.. எந்த கடை-ல, என்ன வாங்குனாலும் காசு குடுக்க மாட்டேன்": மதுப்பிரியர் அட்டூழியம்!! 

கிருஷ்ணகிரி அருகே, காலணி கடை ஒன்றில், காலணி வாங்கிய போதை ஆசாமி, பணம் கேட்டதால், உரிமையாளரை தாக்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஜார் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக தேவாரம் என்பவர் காலணி கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில், சூளகிரியை சேர்ந்த அன்பு என்ற இளைஞர், மது போதையில் காலணி வாங்க கடைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலணி ஒன்றை வாங்கிய போதை ஆசாமி அணிந்து பார்த்து வெளியே சென்றுள்ளார். உடனடியாக கடையின் உரிமையாளர் தேவாராம் காலணிக்கு பணம் கொடுக்குமாறு போதை ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு, தீடிரென கொதித்தொழுந்த போதை ஆசாமி இந்த நகரில் எந்த கடையில் எந்த பொருள் வாங்கினாலும் எவரும் என்னிடம் பணம் கேட்பதில்லை என கூறி கடை உரிமையாளரிடம் போதை ஆசாமி கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். வாக்குவாதம் முத்திய நிலையில் கடை உரிமையாளரை காலணி மற்றும் துடைப்பம் வைத்து சரமாரியாக தாக்கினார் போதை ஆசாமி.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடை உரிமையாளரை போதை ஆசாமி சரமாரியாக தாக்கிய சம்பவம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: "தினமும் 5 ஆயிரம் லோடுகள் கோவை வழியாக கேரளாவிற்கு கடத்தல் நடைபெற்று வருகிறது": எஸ் பி வேலுமணி பேச்சு!