அரைகுறை ஆடையுடன் குடிநீர் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்!

குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அரைகுறை ஆடையுடன் குடிநீர் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்!

குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் உள்ள தியாகராயபுரம் 2வது தெருவில் அமைந்துள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஜீவா என்பவர் அலுவலகத்தில் உள்ள அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தியாகராயபுரத்தில் அமைந்துள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி நிறைய நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதி இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தபோது குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஜீவா மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கிருந்த இளைஞர்கள் அலுவலகத்தை மது கூடமாக ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் அப்படித்தான் செய்வேன் என்று வசனம் பேசியுள்ளார்.

இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர்கள் இரவு நேரங்களில் அரசு அலுவலகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர் அதிகாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மோட்டார்களை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய சூழலில் அலுவலகத்தில்  மது அருந்திக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கி அலுவலகத்தை மது கூடமாக பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.