சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

புளியந்தோப்பு பகுதியில் நேற்று இரவு இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர்  பகுதியில் நேற்று இரவு 10 மணி அள வில் மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து எரித்து விட்டு அதனை ஒரு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த சீனிவாசன் வயது என்பவரது வீட்டு வாசலில் தூக்கி எறிந்தார் அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் லேசாக அங்கங்கே தீப்பற்றி எரிந்தது உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

காவல்நிலையத்திற்கு தகவல்

உடனடியாக இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியந்தோப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர் இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பேசன் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு காந்திநகர் ஆறாவது தெரு பகுதியில் வசித்து வரும் விமல் என்கின்ற சிங்கம் விமல் வயது 30 என்பவரது வீட்டிலும் அதே நபர் பெட்ரோல் பீர் பாட்டிலால் செய்யப்பட்ட பெட்ரோல் குண்டை வீசி எறிந்தார் அது வீட்டு வாசலில் உள்ள மேட்டில் விழுந்து வெடிக்காமல் லேசாக தீ பற்றியது. அதனையும் அக்கம் பக்கத்தினர் அனைத்து விட்டனர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேசன் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர் தகவலின் பெயரில் பேசன் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

காட்டிக் கொடுத்த சிசிடி வி

போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடி வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து புளியந்தோப்பு சரக காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மணி என்பது தெரிய வந்தது.

 குண்டுவீச்சு குறித்து விசாரணை

திரு. வி.க நகர் ஒத்தவடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கின்ற குள்ள மணி பிரபல ரவுடியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்  குள்ளமணியின் மாமா அப்பு என்கின்ற தினேஷ் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓட்டேரியில் வைத்து கதிரவன் என்ற கும்பலால் கொலை செய்யப்பட்டார் அதற்கு பழி வாங்குவதற்காக குள்ளமணி தனது நண்பரான பேசன் பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் விமல் என்பவரை அழைக்க வந்துள்ளார் அதற்கு விமல் நான் பழையபடி எங்கும் வருவதில்லை எனக்கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குள்ள மணி அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது.

மேலும்  இந்ந சம்பவத்திற்கு  முன்பு வாசுகி நகரில் பெட்ரோல் பாம் வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அந்தப் பகுதியில் மாரி என்கின்ற லோடாங்கு மாரி என்பவரை மிரட்டுவதற்காக   பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை அவரது தந்தை சீனிவாசன் அமர்ந்த இடம் பார்த்து வீசி விட்டு அவரிடம் எச்சரித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மணியுடன் வந்த மற்றொரு நபர் புழல் மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு மற்றும் பேசன் பிரிட்ஜ் போலீசார் குள்ளமணி மற்றும் அவரது நண்பரைத் தேடி வருகின்றனர்.