குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்...

குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்...

திருப்பூர் | பல்லடம் சரக மங்கலம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஜெகன் 33.

இவர் குடும்ப பிரச்சனைக் காரணமாக நேற்று தென்னை மரத்துக்கான மாத்திரையை சாப்பிட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று காலை சுமார் எட்டு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லடம் உட்கோட்ட காவல் சரக்கத்தில் குற்றப்பிரிவு காவலர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கோபத்தால் பறிபோன இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர்.....