குப்பைகளுக்கு தீ வைத்ததால் புகை மண்டலமாக மாறிய குடியிருப்பு...

இடையார்பாளையம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் பற்ற வைத்த தீயால் குடியிருப்பு பகுதி புகைமண்டலமாக மாறியது.

குப்பைகளுக்கு தீ வைத்ததால் புகை மண்டலமாக மாறிய குடியிருப்பு...

கோவை | மேட்டுப்பாளையம் அருகே உள்ள இடையார்பாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிக்கதாசம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான இங்கு குப்பைகளை முறையாக சேகரிக்கலாம் இந்த பகுதியில் குவியல் போன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த குப்பைகளை இன்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்ததில் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது இடையார்பாளையம் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக மாறி மக்கள் மூச்சு விடவே கஷ்டம் என்ற நிலை உருவானதால் தூக்கத்தை கலைத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | இறந்து போன கணவன் மற்றும் தாயின் உடலுடன் வாழ்க்கை நடத்திய பெண்...

மேலும் புகை மண்டலமாக மாறியது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குப்பை குவியலில் பற்றிய தீயினை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காலையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க | அடிப்படை வசதிகள் கூட இல்லை!!!- தஞ்சை பெரிய கோவில் குறித்து எழுந்த புகார்கள்...