ஏன் முகத்தை மூடி அழைத்து வந்தீர்கள்? - நீதிபதி கேள்வி...
மாணவி சத்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷிற்க்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மாணவி சத்யா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமான சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க | தந்தை மகள் இணைந்து சென்ற இறுதி ஊர்வலம்... கண்ணீரில் மூழ்கிய சாலைகள்...
இதைத்தொடர்ந்து சதீஷை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது அவர்களை சூழ்ந்துக் கொண்ட வழக்கறிஞர்கள், "ஏன் முகத்தை மூடி அழைத்து வந்தீர்கள்" என்று கேள்வி எழுப்பி சதீஷை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்றம், சதீஷை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது வழக்கறிஞர்கள் குற்றவாளி சதீஷிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க | முறிந்த 5 வருட காதல்.. ரயில் முன் காதலியை தள்ளிவிட்ட காதலன்.. போலீசார் அதிரடி கைது.. தந்தை மரணம்..!
இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளி சதீஷை புழல் சிறையில் அடைத்தனர்.