தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை ஓட ஓட வெட்டிய மகன்..!  

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தனது தாயை அவதூறாக பேசிய நபரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.  

தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை ஓட ஓட வெட்டிய மகன்..!   

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சுரண்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (30). இந்நிலையில் அவர் வழக்கம்போல் ஹோட்டலுக்கு வந்து தனது பணியை தொடங்கியுள்ளார். அப்பொழுது திடீரென பொதுமக்கள் நிறைந்த பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாளுடன் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

அரிவாளுடன் வந்த வாலிபர் மாடசாமியை நோக்கி ஹோட்டலுக்குள் புகுந்து ஓட ஓட விரட்டி கழுத்தில் வெட்டியுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள்  அரிவாளால் வெட்டிய வாலிபரை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாடசாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுரண்டை போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகுருநாதபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பூபதி(24) என்பதும் தனது தாயை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதை கண்டித்தும் கேட்காததால் மாடசாமியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடசாமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் மிகுந்த பகுதியில் வாலிபர் அரிவாளால் கொலை செய்ய முயற்சி செய்தது தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.