தாய் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி...

சிவகங்கை அருகே சரியாக படிக்கவில்லை என்று தாயார் திட்டியதால், 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி...

சிவகங்கை | சிங்கம்புணரி பாரதி நகர் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவரது மகள் சுவாதி ஸ்ரீ வயது 18. சுவாரி ஸ்ரீ தனது அக்கா மற்றும்தங்கை தாயுடன் வசித்து வருகிறார்.

இவர் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயோ மேக்ஸ் பிரிவில் படித்து வருகிறார்.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது...

நேற்று இரவு அவரது அம்மா மரகதவல்லி வீட்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை எனவும் சரியாக படிக்கவில்லை எனவும் சுவாதிஸ்ரீ யை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுடன் இருந்து வந்த சுவாதி ஸ்ரீ இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தனது வீட்டில் ஷாலைக்கொண்டு  தூக்கு போட்டு இறந்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க | மேலும் ஒரு புதிய மதுபான கடை... எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா...

இன்று காலை சுவாதி ஸ்ரீ யின் அம்மாச்சி (பாட்டி) ஆறு முப்பது மணி அளவில்  அறையின் கதவை திறந்து பார்க்கும் பொழுது தூக்கிட்டு நிலையில் இருந்த சுவாதிஸ்ரீ யை கண்டு அலறினார்.

சிங்கம்புணரி தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி காவல் துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுவாதி ஸ்ரீ யின் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சுவாதி ஸ்ரீ ன் இறப்பிற்கு காரணங்களை சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து மீனாட்சி விசாரித்து வருகிறார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அமெரிக்காவிலிருந்து சரியான நேரத்தில் பெறப்பட்ட தகவலால் மும்பை இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை!!!