பிரபல கல்லூரி மைதானத்தில் கிடந்த வாலிபரின் சடலம்!

சென்னை மாநிலக் கல்லூரி மைதானம் அருகே உள்ள முள்புதரில் இறந்த நிலையில் கிடந்த வாலிபரின் உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல கல்லூரி மைதானத்தில் கிடந்த வாலிபரின் சடலம்!

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரியில் மைதானத்திற்கு அருகே உள்ள முட்புதரில் நடுவே ஒரு வாலிபர் இருப்பதைக் கண்டு 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 108 அவசர ஊர்தி மருத்துவர் முட்புதரில் நடுவே இருந்த வாலிபரை மீட்டு சோதனை செய்ததில் அவர் இறந்து பல நேரம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் மயிலாப்பூர் டுமீல் குப்பம் பகுதியை சேர்ந்த பூபாலன் என தெரியவந்தது. மேலும், பூபாலனின் பின்தலையில் பலமாக வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  பூபாலனை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பூபாலன் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சட்டமன்றம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவில் வருகை தந்துள்ள நிலையில் நூற்றாண்டு விழா நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இந்த கொலை சம்பவத்தால் மக்கள் மத்தியில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது