அம்மா தங்கையின் குளியலறை, ஆடை மாற்றும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய பெண்.. விசாரணையில் வெளியான கேவலமான செயல்

காதலியுடன் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து, அவளின் ஆபாச படங்களை மட்டும் வைத்து விட்டு, காதலியை கழட்டி விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த பிறகும், ஆபாச படங்களை வைத்து காதலியின் அம்மா, தங்கையின் ஆபாச படங்களையும் கேட்டு மிரட்டிய நபர். கேட்கும் போதே தலை சுத்துகிறதா? இப்படியும் ஆம்பளைங்க இருக்கத்தான் செய்யுறாங்க அப்டின்னு சாதாரணமா கடந்து போக முடியல. 

அம்மா தங்கையின் குளியலறை, ஆடை மாற்றும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய பெண்.. விசாரணையில் வெளியான கேவலமான செயல்

திருச்சில நடந்தேறியிருக்கு இந்த கொடூர சம்பவம். சினிமா படத்தையே மிஞ்சும் அளவுக்கு நடந்தேறிய இந்த சிறந்த காதல் கதை, அப்டின்னு சொல்ல முடியாது வெறிபிடித்த சைக்கோவோட கதை என்றே சொல்லாம்.

திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த இளம் பெண், தன்னோட குடும்ப நண்பரான சதீஷ் கூட நட்பா பழகி வந்துருக்காங்க. நாளடைவுல சதீஷ் கூட ஏற்பட்ட நட்பு காதலா மாறுயிருக்கு. இந்த பொண்ணுங்க தரங்கெட்ட பசங்களையா பாத்து விழுகுறாங்களா? இல்ல இந்த பசங்க சுலபமா ஏமாற பொண்ணுங்கள தன்னோட வலைல விழுக வைக்கிறாங்களா? அப்டிங்குறது யாராலையும் கண்டு பிடிக்க முடியாத புதிர்.

காஞ்சிபுரத்துல வேல கிடைச்சு அங்கு போன பொண்ண, பின்னாடியே ஹெச் டாக் மாறி தொரத்திட்டு போயிருக்கான் சதீஷ். தனியார் கம்பெனியில சதீஷும், செல்போன் கடையில அந்த பொண்ணும் வேலை பாத்துட்டு இருந்த நிலையில, இரண்டு பேரும் தனி தனியா இருந்த செலவு ரொம்ப ஆகுங்குற தொலை நோக்கு பார்வையில, இரண்டு பேரும் ஓகே கண்மணி திரைப்படம் மாதிரி ஒரே வீட்டுல லிவ்விங் டூ கெதர் முறையில குடும்பம் நடத்தி வந்துருக்காங்க.

ஓ அழகே, உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண நா பாத்ததே இல்ல. நீ கெடச்சது நா பன்னின புண்ணியம் அப்டி இப்டி 4 பிட்ட போட்ட சதீஷ நம்பி, அவர் எதார்த்தமா கையப் புடிக்க இந்தப் பொண்ணும் பதார்த்தமா விட்டுக் கொடுக்க. இப்டியே நாட்கள் ஓடிருக்கு. எப்டியும் கல்யாணம் பன்னிக்க போறதில்ல வரத ஏன் விடனும்னு நினைச்ச சதீஷ், 2 பேரும் உல்லாசமா இருக்கறத வீடியோ எடுத்து வைக்க, இது தெரியாத அந்த பொண்ணு எதிர்கால கணவன் அப்டின்னு கனவு கண்டு ரொம்ப ஓபனா இருந்துருக்காங்க.

ஒரு காலகட்டத்துல நினச்சது அடஞ்ச அப்புறம் போர் அடிச்சு போன சதீஷ், அந்த பொண்ணுட்ட நான் உன்ன கல்யாணம் பன்ன போறதில்ல. வேறொரு பொண்ண காதலிக்கிறதாகவும், அந்த பொண்ணதா கல்யாணம் பன்னிக்க போறதாவும் சொல்ல, இத கேட்டு அதிர்ச்சி அடஞ்ச அந்த பொண்ணு நாலாபுறமும் அழுது, புலம்பி சதீஷ கெஞ்ச, உன்னோட அந்தரங்க புகைப்படங்கள சமூக வலைத்தலங்கள விட்டுருவேன்னு மிரட்ட, அந்த பொண்ணு ஊருக்கு போய் குடும்பத்தோட செட்டில் ஆகிட்டாங்க.

சதீஷ் வேறொரு பொண்ணோட கல்யாணம் முடுஞ்ச அப்புறமும் தன்னோட காதலிக்கிட்ட கொஞ்சம் விளையாடலாம்னு நெனச்சு, தன்னோட வில்லன் முகத்த காட்ட ஆரம்பிச்சான். மறுபடியும் தன்னோட உல்லாசமா இருக்கனும்னு காதலிய வற்புறுத்த, அந்தப் பொண்ணும் பயந்து சம்மதம் தெரிவிக்க இப்படி காதலிக்கிட்ட கள்ளத்தனமா வாழ்ந்து வந்துருக்கான் சதீஷ்.

நிறைய வில்லன் படங்களை பாத்து பாத்து வெறியேறிப்போன சதீஷ், அந்தப் பொண்ணுட்ட உங்க அம்மா, தங்கச்சியோட நிர்வாணப் படங்களை தனக்கு அனுப்பனும்னு கொடுமை படுத்த ஆரம்பிச்சுருக்கான். அவன் ஆட்டுன ஆட்டத்துக்கெல்லாம் இந்தப் பொண்ணும் ஆட ஆரம்பிச்சதால, சதீஷோட வேல ரொம்ப சுலபமா இருந்துருக்கு. 

செல்போனோட அங்குட்டும், இங்குட்டும் திருஞ்சுட்டு இருந்ததால சந்தேகம் ஏற்பட்டு, அந்தப் பொண்ணுகிட்ட பெற்றோர் விசாரிக்கும் போது, அந்தப் பொண்ணும் உண்மையெல்லாம் ஒன்னு விடாம கொட்டிட்டாங்க. இத கேட்டு வாயடச்சு போய் உட்காந்த பெற்றோர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போய், சதீஷ் பத்தி புகார் அளிச்சுருக்காங்க. இந்த புகார சீரியஸா விசாரிச்ச அதிகாரிகள், சதீஷை கைது செய்து விசாரணை நடத்துனாங்க. 

பொண்ணுகிட்ட ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி, அந்தப் பொண்ணோட அந்தரங்க புகைப்படங்களை எடுத்தது மட்டுமில்லாம, அத வச்சு அந்தப் பொண்ணோட அம்மா, தங்கச்சி ஆபாச படங்களை கேட்டு மிரட்டின இந்த காமக் கொடூரன கைது செய்த போலிசார், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 2 பிரிவுகளையும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பா 1 பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பன்னிருக்காங்க. தண்டனைகள் கடுமையானாதான் இந்த மாதிரியான குற்றங்கள தடுக்க முடியும்னு சொல்றாங்க சமூக ஆர்வலர்கள்.