மர்ம உறுப்பில் காயத்துடன் உயிரிழந்த புஷ்பா புருஷன்.... 2 கள்ளகாதலன்களுடன் காதலி செய்த லீலைகள் அம்பலம்

மர்ம உறுப்பில் காயத்துடன் உயிரிழந்த புஷ்பா புருஷன்.... 2 கள்ளகாதலன்களுடன் காதலி செய்த லீலைகள் அம்பலம்

சேலம் மாவட்டம்  மல்லமுப்பம்பட்டியை  சேர்ந்தவர்தான் சுப்பிரமணி. 49 வயதான இவர் அந்த பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது போக்குவரத்து தடைபட்டதினால் வீட்டிலேயே இருந்து பொழுதைப் போக்கி வந்தார் சுப்பிரமணி.


இந்த சுப்பிரமணிக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பே, புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நிகழ்ந்த 8 வருடத்திலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்க்கை நடத்தி வந்தனர். 

மனைவியை  விட்டு பிரிந்த சுப்பிரமணி, தளவாய்ப்பட்டியில் வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போதுதான் உமா மகேஷ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் உருவாகியிருந்தது. 

இந்த நிலையில்தான் கடந்த 11-ம் தேதியன்று வீட்டில் கட்டிலில் படுத்துக் கிடந்த சுப்பிரமணி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

சுப்பிரமணி இறந்ததை அறிந்து கொண்ட உறவினர்கள் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

 உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர்களுக்கு உண்மை தெரியவந்தது. சுப்பிரமணியின் கழுத்திலும், ஆணுறுப்பிலும் காயம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். 

இந்த விவரத்தினை சேகரித்த போலீசார், கொலை நடந்ததற்காக பின்னணி என்ன என்ற ஆய்வில் இறங்கினர். அந்த பகுதியில் சுப்பிமணியின் வீட்டை ஒட்டி உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு ஆண்களுடன், ஒரு பெண் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. வரும்பொழுது, அமைதியாகவும், திரும்பி செல்லும் போது பதற்றமாகவும் இருப்பதை அறிந்து கொண்டனர் போலீசார். 

சுப்பிரமணியின் வீட்டுக்கு வந்த பெண் அவருடன் ஒன்றாக வசித்து வந்த உமா மகேஸ்வரிதான் என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவருடன் வந்த இரண்டு ஆண்கள் யார் என்ற விசாரணையை முடுக்கி விட்டனர் போலீசார். அப்போதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. 

புஷ்பா என்ற பெண்ணை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த சுப்பிரமணிக்கு உமா மகேஸ்வரி அறிமுகம் ஆனார். ஆனால் இந்த உமாமகேஸ்வரிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி கணவருடன் உண்டான பிரச்சினையால் அவரும் கணவரை விட்டு தனியே வாழ்க்கை நடத்தி வந்தாராம். 

நானும் மனைவியை இழந்து தவிக்கிறேன். நீயும் கணவனை இழந்து தவிக்கிறாய்.. நாம் ஏன் ஒன்றாக வாழக்கூடாது என்று நினைத்தவர், உமா மகேஸ்வரியுடன் விருப்பத்தை தெரிவித்தார். இருவருக்கும் கள்ளத் தொடர்பினால் ஏற்பட்ட உறவு ஒன்றாக வீட்டில் தங்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது. 

இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த கள்ளக்காதல் ஜோடி, சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள வேறு வீட்டுக்கு குடியேறினார். அப்போது பழைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு புதிய வீட்டில் சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அதிகமான பொருட்களை நகர்த்த வேண்டும் என்பதால் ஒரு லாரியை புக் செய்திருந்தனர். 

செங்காட்டூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜனை அழைத்தார் சுப்பிரமணி. பொருட்களை இடம் மாற்றுவதற்காக வீட்டுக்குள் வந்த நாகராஜனுக்கு, இதயம் இடம் மாறியது. திருமணம் செய்யாமல் வாழும் கள்ளக்காதல் ஜோடிதான் என்றதால், நாமும் அவ்வப்போது வந்து செல்லலாம் என்று நினைத்திருக்கிறார் நாகராஜன். நாகராஜனை பார்த்த மறு நிமிடமே அவரது பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டார்.

 சுப்பிரமணி கட்டிய புற்றுக்குள் கேட்காமலேயே நுழைவதற்கு விருப்பம் கொண்டார் நாகராஜன். அவ்வப்போது வந்து முட்டையும் பாலும் அருந்தி விட்டு நிம்மதியாக உலவலாம் என்று நினைத்த நாகராஜன், சுப்பிரமணி இல்லாத நேரத்தில் நுழைந்தார். 
நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தால், கணவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வா நாகராஜா.. என உமா மகுடி ஊத, மதிமயங்கியிருக்கிறார் நாகராஜன். 

ஆனால் இப்படி உமாவின் வீட்டுக்கு வந்து செல்வதும், உம்மா கொடுப்பதும் அரசல் புரசலாக தெரிந்து கொண்டார் சுப்பிரமணி. நேராக வந்து உமாவிடம் சண்டை போட்டிருக்கிறார். ஆனால் நாகராஜனிடம் நட்பு ரீதியாகத்தான் பழகினேன் என்று சொல்லி வாயை அடைத்திருக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து, சுப்பிரமணிக்கு புதிதாக ஒருவரின் மீது சந்தேகம் இருந்தது. சுப்பிரமணிக்கு தெரியாமல் நாகராஜனிடம் பழகியதுபோல, நாகராஜனுக்கு தெரியாமல் கண்ணன் என்பவரிடம் தொடர்பு வைத்திருக்கிறார் உமா. 
இருவரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்த கண்ணன், லீலைகளை அரங்கேற்றியிருக்கிறான். ஆனால் கண்ணனுடனான போக்குவரத்து நாகராஜனுக்கு தெரியவர, நாகராஜனும், கண்ணனும் பரஸ்பரம் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். 

சுப்பிரமணிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு யாரும் சிக்கிக் கொள்ளாதவாறு தவறுகளை செய்து கொள்ள வேண்டும். யாரும் யாரையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்று சத்திய உடன்படிக்கையை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 நாகராஜனும், கண்ணனும் தனித்தனியே வந்து கொண்டிருந்ததையும் தாண்டி, இருவரும் ஒரே நேரத்தில் உமா மகேஸ்வரியிடம் ரகசியப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்திருக்கின்றனர். இந்த விவகாரம் சுப்பிரமணியின் காதுகளுக்கு செல்லவே, கோபமாக கிளம்பி வந்தார். 

இரண்டு பேரை நீ வைத்துக் கொள்கிறாயாமே.. எனக்கு தெரியாமல் இப்படியெல்லாம் நாடகத்தை நடத்துகிறாயா? அசிங்கமாய் இருக்கு என்று ஆத்திரத்துடன் பேசியிருக்கிறார். நீயும் உன் மனைவியை விட்டு என்னைத் தேடி வந்தவன்தான்.  அப்படி அசிங்கம் என்றால் உன் மனைவியோடு இருந்திருக்க வேண்டியதுதானே என்று பதிலுக்கு பேசி தனது தவறை நியாயப்படுத்தியிருக்கிறார் உமா. 

அதிலிருந்து வலுவடைந்த சண்டை ஒரு கட்டத்தில் தாக்குதல்களாகின. உமாவின் மீது எரிச்சலடைந்த சுப்பிரமணி, உமாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார். 
அழகாக இருக்கிறோம் என்ற திமிரில்தானே இப்படியெல்லாம் செய்கிறாய்? உன் அழகை நாசமாக்கி விடுவேன். உனது முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் சுப்பிரமணி. இதனால் மிகவும் பயந்து போன உமா, கள்ளக்காதலன்கள் இருவரிடம் கூறியிருக்கிறார். 

இதோடு நம் சங்காத்தத்தை முடித்துக் கொள்வோம் என்று சொல்வாளோ என்று நினைத்தவர்களுக்கு அவள் கூறியது அதிர்ச்சியடைய வைத்தது. என் புருசனுக்கு உண்மை தெரிந்து விட்டது. அதனால் இதற்கு மேலும் அவனை விட்டு வைக்கக்கூடாது. இனியும் சுப்பிரமணி உயிரோடு இருந்தால் தன்னால் சந்தோஷமாக வாழ முடியாது. 

அதனால் அவனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று கூறினார் உமா. கள்ளக்காதலில் மூழ்கிப் போன நாகராஜனும், கண்ணனும், அவனை கொலை செய்வதுதான் சரி என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஜூன் 11-ம் தேதியன்று இரவு சுப்பிரமணி வந்தவுடன், அவருக்கு சாத்துக்குடி பழச்சாறு கொடுத்தார். 

என்றைக்கும் இல்லாதவாறு இன்றைக்கு உமாவிடம் ஒரு மாற்றம் உண்டாகியிருக்கிறது என்று வியந்துபோன சுப்பிரமணி, அதனை வாங்கி குடித்தார். குடித்த சற்று நேரத்திலேயே கண்ணுறக்கம் ஏற்பட்டது. சுப்பிரமணி மயங்கி கீழே விழுந்ததை பார்த்த உமா, கள்ளக்காதலன்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்தார். 

என் புருசனுக்கு பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டேன் கொஞ்ச நேரத்துக்கு எழுந்தரிக்க மாட்டான். அதனால் யாருக்கும் தெரியாமல் இவன் கதையை முடித்து விடுவோம் என கூறியிருக்கிறார் உமா. உமாவின் பேச்சினை வேதவாக்காக எண்ணிய சுப்பிரமணியின் கை கால்களை இறுக்க பிடித்துக் கொண்டனர். 

உமா, சுப்பிரமணியின் கழுத்தை பிடித்து வலுவாக நெரித்தார். சற்று நேரத்தில் கண் விழித்த சுப்பிரமணி கத்துவதற்கு முற்பட்டார். ஆனால் கைகால்கள் இறுக்கப்பட்டதாலும், உமா, அவரது வாயை பொத்திக் கொண்டதாலும், எதுவும் செய்ய முடியாமல் துடித்தார். எனது வாழ்க்கையில் தலையிடுவதற்கு நீ யார்? நீ என்ன எனக்கு தாலி கட்டிய புருஷனா? என்று கோபத்தில் கழுத்தை நெரித்த உமா, அவரது ஆணுறுப்பையும் நுசுக்கி, தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். 

இப்படியே விட்டுச் செல்வோம். காய்ச்சலால் இறந்து விட்டதாக நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தனர். அதைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். 

அடுத்தநாள் சுப்பிரமணி இறந்ததை புதிதாக அறிந்து கொண்டது போல ஓடிப்போய் அள்ளி அணைத்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடித்தார் உமா. உமாவிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல பொய்களை சரம் தொடுத்து அடுக்கினார்.

டெங்கு காய்ச்சலால் அவருக்கு உடம்புல வெள்ளை அணுக்கள் கம்மியா இருக்குனு டாக்டர் சொன்னாங்க.. நான்தான் 10 நாளா சாத்துக்குடி ஜூஸ் போட்டு கொடுத்து பக்கத்துலயே இருந்து கவனிச்சிக்கிட்டு இருந்தேன் என சொன்னார்.

அதோடு, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு வேறு ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒருவர் சொன்னதாகவும், அவரை பார்ப்பதற்கு கிளம்பிச் சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது சுப்பிரமணி இறந்து கிடந்ததாகவும் புளுகு மூட்டைகளை இறக்கினார். ஆனால் போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் உண்மையெல்லாம் வெளியே வந்தது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இரும்பாலை காவல்நிலையத்துறையினர் உமாமகேஸ்வரி மற்றும் அவருடைய ஆண் நண்பர்கள் நாகராஜன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தவர், வேறு சில நபரோடு இணைந்து சுப்பிரமணியை கொடூரமாக கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.