நடிகை வீட்டில் டிவி திருட்டு....திருட்டு டிவி-யை கொண்டுசெல்ல, காரை திருடிய திருடர்கள்!

நடிகை வீட்டில் டிவி திருட்டு....திருட்டு டிவி-யை கொண்டுசெல்ல, காரை திருடிய திருடர்கள்!

சென்னை மதுரவாயலில், சின்னத்திரை நடிகையின் பங்களா வீட்டில் திருடிய டிவியை கொண்டு செல்ல, பாஜக  பிரமுகரின் காரை திருடி மாட்டி கொண்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 9ம் தேதி சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் 15 வது தெரு பகுதியில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான  நடிகர்  ராஜ்கமல், நடிகை லதா ராவ் ஆகியோருக்கு சொந்தமான சூட்டிங் பங்களா வீட்டில் லட்ச ரூபாய் மதிப்பிலான டிவி , மோட்டார் ஆகியவை திருடு போனது. 

இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த வீட்டுக்கு அடுத்த வீடான  பாஜக கட்சியின் பிரமுகர் பொன். பிரபாகர் என்பவர்  வீட்டின்  வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த அவருடைய கார் ஓன்றும் அதே நாளில் திருடு போனது தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், காணாமல் போன கார் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது மடக்கிய போலீசார், காரில் இருந்த பிராட்வே, கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த காஜா மெய்தீன் மற்றும் திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த அமீனுதீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.  

தொடர்ந்து இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில்,  நடிகையின் பங்களா வீடு என்பதால் அதிக அளவில் பொருட்கள் இருக்கும் என நினைத்து திருட வந்தவர்களுக்கு, வீட்டிற்குள் டிவி மட்டுமே இருந்தது ஏமாற்றத்தை அளித்ததாகவும், இதனால் அங்கிருந்த டிவியை மட்டுமே திருடி கொண்டு வெளியே வந்தபோது 
அதனை எடுத்து செல்ல வாகனம் இல்லாததால் காரையும் சேர்த்து  திருடியது தெரிய வந்தது. 

தற்போது இருவரையும் கைது செய்து, காவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு!!