தொடர்ந்து நள்ளிரவில் வந்து பாஜக பிரமுகரை அச்சுறுத்தும் மர்ம நபர்கள்!

தொடர்ந்து நள்ளிரவில் வந்து பாஜக பிரமுகரை அச்சுறுத்தும் மர்ம நபர்கள்!

மதுராந்தகத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மகன் நீலகண்டன் (35). இவர் பாரதி ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் நீலகண்டன் விளங்கி வருகிறார். 

இந்நிலையில் இம்மாதம் 24-ஆம் தேதி இவரது இருசக்கர வாகனம் அவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பொழுது நல்லிரவு ஒரு மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதனை அடுத்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அடுத்து மர்ம நபர்கள் தனது இறுதி சக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாகவும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என படாளம் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு அவர் வீட்டு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் எரிந்து நாசமானதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார் நீலகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மணிப்பூர் கலவரம்: கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகுவதாக தகவல்!