கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கொடூரம்... சாலையில் தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகம்...

கடலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துவிட்டு, இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.  

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கொடூரம்... சாலையில் தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகம்...

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு வனஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வனஜா அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தனிமையில் இருந்ததை முருகன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து வனஜாவை முருகன் தாக்கிய போது, ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், வனஜாவுடன் சேர்ந்து முருகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் முருகன் சாலையில் தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக கூறினர்.

எனினும் வனஜாவின் முன்னுக்கு பின் முரணான பேச்சால் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.