ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத 1500 பொம்மைகள் பறிமுதல்...

ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத 1500 பொம்மைகள் பறிமுதல்...

சென்னையில் இருவேறு இடங்களில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத மற்றும் தரம் இல்லாத பொம்மைகளை விற்ற கடைகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளில் உள்ள பொம்மை கடைகளில் பி ஐ எஸ் சென்னை கிளை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஓ.எம்.ஆரில் உள்ள தனியார் பொம்மைகடையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத மற்றும் தரம் இல்லாத 49 பொம்மைகள் , பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள தனியார் கடைகளிலும் ஆயிரத்து 500 பொம்மைகள்  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் நுழைந்த ஆளில்லா விமானம்.....