கடையின் சுவற்றை உடைத்து 25 சவரன் தங்க நகை கொள்ளை...

ஊத்தங்கரை அருகே கடையின் சுவற்றை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் சுவற்றை உடைத்து 25 சவரன் தங்க நகை கொள்ளை...

கிருஷ்ணகிரி | ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரூர் சாலையில் விக்னேஸ்வரர் நகைகடையை திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த சேகர் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் இந்த நகை கடை செயல்பட்டு வருகிறது.

வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடி விட்டு சென்ற சேகர், நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் நகைக் கடை பின்புறத்தில் சுவற்றில் பெரிய அளவில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து 25 பவுன் நகை, 20 கிழோ வெள்ளி என லாக்கரை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | உணவகத்தில் லாவகமாக நுழைந்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

மேலும் நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடங்கி டிஷ்கை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் தனிப்படை போலீசார் என பல குழுக்களாக பிரிந்து நகைக்கடை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | நாமக்கல் ரவுடியை சிறையில் அடைத்த போலீசார்...

மேலும் ஊத்தங்கரை அரூர் நெடுஞ்சாலையில் மெயின் ரோட்டில் கொள்ளையர்கள் நகைக்கடைக்குள்ளே நுழைந்து இருப்பது பொது மக்களுடைய பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இரவு சுவரில் ஒட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் நகைகடை லாக்கரை உடைத்து 20 பவுன் நகை,20 கிலோ வெள்ளி கொள்ளை என தகவல் போலீசார் மோப்பநாய் உதவியிடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | இனி பெண்களுக்கு தலைநகரில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது....