மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 சினை மாடுகள்...! சோகத்தில் அப்பகுதி மக்கள்...!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 சினை மாடுகள்...! சோகத்தில் அப்பகுதி மக்கள்...!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு அக்ரஹாரம் தெருவில் உள்ள காலி மனையில் செல்வம் என்பவருக்கு  சொந்தமான இரண்டு சினை மாடுகளும், மல்லிகா என்பவருக்கு சொந்தமான ஒரு சினை மாடும் மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென அப்பகுதியில் செல்லும் மின்சார வயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து மூன்று சினை மாடுகளும்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாகஉயிரிழந்தன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆவடி மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. 

குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி வருவாய் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று உடற்கூறு ஆய்வு செய்த பின் பசுமாடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்படுகிறது.
ஒரே பகுதியில் 3 சினை பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கோவை வந்த லெஜெண்ட் சரவணன்...! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்...!