கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது...

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது...

விழுப்புரம் | அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிச்சனூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக,போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதனடிப்படையில், போலீசார் அப்பகுதிக்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான பிரபு(22) ராபர்ட்ராஜ்(20) இவர்களிடம் கஞ்சா பொட்டலம் வாங்க வந்த திருவண்ணாமலை மாவட்டம்,விருதுவிளங்கினான் பகுதியை சேர்ந்த இளைஞர்களான சுமன்(20) பாக்யராஜ்(21) ஆகிய 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 32-பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | சின்ன பிரச்சனை கத்திகுத்தாக மாறிய அவலம்.. நாய் வந்து தடுத்த சிசிடிவி காட்சிகள்...