இறைச்சிக் கடை உரிமையாளரைத் தாக்கிய 5 பேர் கைது...

இறைச்சிக் கடை உரிமையாளரைத் தாக்கிய 5 பேர் கைது...

கிருஷ்ணகிரி | பர்கூரில் ஆட்டு இறைச்சி கடை உரிமையாளரை தாக்கிய ஐந்து பேரை காவல்துறையினா் கைது செய்தனா். பர்கூர் தாலுக்கா அலுவலகம் முன்பு சந்தோஷ் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

அப்போது, இறைச்சி வாங்க வந்த மனோஜ் மற்றும் அவருடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சந்தோஷ் இடம் கலவரத்தில் ஈடுப்பட்டனா். இதில் சந்தோசஷ் படுகாயம் மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினா் கலவரத்தில் ஈடுப்பட்ட ஐந்து பேரை கைது செய்தனா். விசாரணையில், ஆட்டு இறைச்சி விற்பனையில் ஏற்பட்ட முன் விரோதம் என தொியவந்து.

மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு...சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!