பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...

வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...

திருவள்ளூர் | அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இலவச மின்சாரம் அளவு அதிகரிப்பு - தமிழக முதலமைச்சருக்கு நன்றி