லிஃப்டில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்...! துரிதமாக செயல்பட்ட காவலர்கள்...!

லிஃப்டில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்...! துரிதமாக செயல்பட்ட காவலர்கள்...!

சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட சென்றபோது, லிஃப்ட் பழுதானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது . 

பாண்டி பஜார் காவல் எல்லைக்கு உட்பட்ட  ஜி.என். செட்டி சாலையில் உள்ள  வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் பிரபல தனியார்  உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் ஒரு சிறுவன் என  7 பேர் சென்றுள்ளனர். லிஃப்ட் மூலம் 2 வது தளத்தில் உள்ள உணவகத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது லிஃப்ட் திடீரென கோளாறு ஏற்பட்டு இயங்காமல் இருந்துள்ளது. இதையடுத்து லிஃப்டில் இருந்தவர்கள், கதவைத் தட்டி கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர் அந்த வழியாக சென்ற நுண்ணறிவு பிரிவு காவலர் குகன் என்பவர் சென்று விசாரித்தபோது உள்ளே 1 மணி நேரமாக அவர்கள் சிக்கி கொண்டது தெரியவந்தது. தொடர்ந்துகாவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாண்டி பஜார் போலீசார், நுண்ணறி பிரிவு காவலர் குகன், ரோந்து வாகன காவலர் மாரிமுத்து உள்பட மூன்று பேர் லிஃப்டின் கதவுகளை இரும்புராடுகளால் உடைத்து 1 மணி நேரமாக சிக்கிக் கொண்டிருந்த ஏழு பேரையும் பத்திரமாக  மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களை மீட்ட காவலர்களுக்கு, அந்தகுடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.