சூளகிரியில் லாரி மீது பைக் மோதிய விபத்து...!!

சூளகிரியில் லாரி மீது பைக் மோதிய விபத்து...!!

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூரை நோக்கி கிரனைட் கற்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது.  அதே சாலையில் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசேகரா மற்றும் இவரது நண்பர் இருசக்கர வாகனத்தில் வந்து லாரியின் பின்னால் பலமாக மோதியுள்ளனர். 

இந்த விபத்தில் ஜெயசேகரா என்பவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதபமாக உயிரிழந்தார். மேலும் உடனிருந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த சூளகிரி போலீசார் படுகாயம் அடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவயிடத்தில் உயிரிழந்த ஜெயசேகரா உடலை பிரேத பரிசோதனைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:   50 கிலோ எடையுள்ள கற்களை மார்பில் உடைத்து மாணவர்கள் சாதனை...!!!