ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்...!!

ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்...!!

கொடைக்கானல் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் வந்த  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பாதையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடி சேர்ந்த சிராஜுதீன் என்பவர் காரில் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி உள்ளார். அவர்கள் வந்த கார் கொடைக்கானல் மலை அடிவாரம் காமக்காபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது காரில் எஞ்சினில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. 

இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட காரில் இருந்தவர்கள் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்து உடனடியாக வெளியேறினர். அதே வேளையில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இதில் காரில் இருந்த பெண் உட்பட 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் இச்ச சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கொடைக்கானல் மலை சாலையில் கார் தீ பிடித்து எரிந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!