மீன் வலையில் சிக்கிய மலை பாம்பு...

அம்மாபேட்டை அருகே மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மீன் வலையில் சிக்கிய மலை பாம்பு...

ஈரோடு | அம்மாபேட்டை அருகே  மடத்துக்கு சொந்தமான ஏறி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை பிடித்து எடுத்துக் கொண்டிருந்தபோது மீன் வலையில் 6 அடி நீளவுள்ள மலை பாம்பு ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க | மலைபாம்பைப் பிடித்து செல்ஃபீ எடுத்த இளைஞர்கள்...

சுதாரித்த மீனவர்கள் பாம்போடு சேர்த்து மீன் வலையை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இது குறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த துறையினர் மலை பாம்பை பிடித்து சென்னம்பட்டி  அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட ராட்சத கரும்பு தேரை...