குப்பை தொட்டியில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை...!

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை...!

சேலம் மாவட்டம் நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை வழக்கம் போல குப்பையை அல்ல மாநகராட்சி பணியாளர்கள் சென்றுள்ளனர்.  அப்போது பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பைத் தொட்டியில் உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குழந்தையை வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் குழந்தையின் பாலினத்தை அடையாளம் காண்பதில் சிக்கல்உள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.