சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்...பொதுமக்கள் அச்சம்...

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்...பொதுமக்கள் அச்சம்...

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


சென்னையில் வடகிழக்கு பருவமழையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய நிலையில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து பெரம்பூர் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று இரவு 2.30 மணிக்கு அளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வந்த காவல்துறையினர் அந்தப் பகுதி முழுவதுமாக தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் மூன்றாவது முறையாக இந்த திடீர் பள்ளம் என்பது ஏற்பட்டிருப்பதாக இங்க இருக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். 

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் வந்த பிறகுதான் இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது எத்தனை அகலம் உள்ளது என்பது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.