திடீரென தீ பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்...

திருப்பத்தூர் மாவட்டத்தில், எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென தீ பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்...

திருப்பத்தூர் | வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் எஷானுல்லா இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் எஷானுல்லா இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார்.

மேலும் படிக்க | மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை அருகே தீ விபத்து..!

இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து  உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளனர்.இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் கூச்சலிட்டனர்.

சப்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு மணல் எடுத்து வீசி  தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

மேலும் படிக்க | போலீஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். இருப்பினும் எலக்ட்ரிக் பைக் முழுவதும் எறிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. இந்த புகை மூட்டம் காரணமாக வீட்டில் இருந்த கரிபினி பெண் உட்பட 2 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நகர போலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் எலக்ட்ரிக் பைக் தீ விபத்து குறித்து அந்த பைக் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாகிறதா...? முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் அலுவலர்!