தடுப்பூசி செலுத்த வந்த நாய்க்கு வெறிபிடித்த சம்பவம்...! அச்சத்தில் அரறியடித்த மக்கள்...!

தடுப்பூசி செலுத்த வந்த நாய்க்கு வெறிபிடித்த சம்பவம்...! அச்சத்தில் அரறியடித்த மக்கள்...!

கிருஷ்ணகிரியில் வெறி நோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறி பிடித்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி பி.ஆர்.சி பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி துவக்கி வைத்து வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தினர். அப்போது தடுப்பூசி செலுத்த அழைத்து வந்த நாய் ஒன்று வெறி பிடித்து அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்தது. மேலும் அங்கு இருந்த மற்றொரு நாயை கடித்து குதறியது. வெறிபிடித்த நாயை கட்டுபடுத்த முடியாமல் அங்கிருந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு அந்த நாயை தாக்கினர்.

பின்னர் நாயின் உரிமையாளர், வெறி பிடித்த தனது நாயை கட்டுப்படுத்தி பெல்டில் கட்டினார். தடுப்பூசி செலுத்திகொள்ள வந்த நாய்க்கு திடீரென வெறிபிடித்து அங்கிருந்தவர்களை கடிக்க பாய்ந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலரடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..