குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடிகள்...! பொதுமக்கள் அச்சம்...!

குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடிகள்...! பொதுமக்கள் அச்சம்...!

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து மக்களை அச்சுறுத்து வருகிறது.

இந்நிலையில் அரவேனு பெரியார் நகர் வீட்டில் கரடி ஒன்று அதிகாலையில் உலா வந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கரடி உலா வருவது பதிவாகியுள்ளது. அண்மையில் இப்பகுதியில் நான்கு சிறுத்தைகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வனத்துறையினர் கூண்டு வைத்து கரடி, சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.