செல்லப் பிராணிகளுக்கான போட்டியில் அழகுப் பூனைகள் பங்கேற்பு...

செல்லப் பிராணிகளுக்கான போட்டியில் அழகுப் பூனைகள் பங்கேற்பு...

சென்னை | மதுரவாயலில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டுப் பூனைகள் போட்டியில் பங்கேற்றன. ஃவிலைன் கிளப் கிளப் இந்தியா சார்பில் 40வது பூனைகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பூனைகள் பங்கேற்றன. அதேபோல் தென் இந்தியாவில் உள்ள விலங்குகள் பிரியர்கள் பலர் இந்த போட்டியில் தங்கள் பூனைகளை உற்சாகமாக காட்சிப்படுத்தினர்.

மேலும் படிக்க | கோலப் போட்டியில் அசத்திய பெண்கள்... பரிசாக தங்க காசு...