இந்திர விமானத்தில் சந்திரசேகர் சுவாமிவீதி உலா...

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இந்திர விமானத்தில் சந்திரசேகர் சுவாமிவீதி உலா நடைபெற்றது.

இந்திர விமானத்தில் சந்திரசேகர் சுவாமிவீதி உலா...

நாகை | வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்  சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று 14ம் நாள் நாள் மாசிமக  திருவிழாவில் சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது பின்பு மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் முக்கிய விதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய மாசித் திருவிழா...!