மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு விடுமுறை...

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளனர்.

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு விடுமுறை...

சிவகங்கை | திருப்புத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. 1972 கல்லூரி 30 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு இக்கல்லூரியில் பொன்விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இக்கல்லூரியில் நேற்று மாணவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுவரும் வணிக நிர்வாகவியல் துறை கௌரவ விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கல்லூரி முதல்வர் முத்துச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று முதல் வருகின்ற செவ்வாய்கிழமை வரை கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவித்து கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க | ரூ. 2.85 கோடிகளுக்கு கட்டப்படும் பாலம் தரமற்றது என குற்றச்சாட்டு...