மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு...!!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு...!!!

வேடசந்தூர் அருகே ஆடையை அயர்ன் செய்யும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியாகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பில்லம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெயின்டர்.  இவருக்கு ஸ்வேதா என்ற மகளும் பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர்.

ஸ்வேதா திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம் மகளிர் கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ஸ்வேதா கல்லூரி முடிந்த பிறகு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் புத்தக கடையில் பகுதி நேர வேலையும் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை குளித்துவிட்டு வந்து தனது சுடிதாரை இஸ்திரி செய்வதற்காக எலக்ட்ரிக் அயன் பாக்ஸை போட்டுள்ளார்.  ஈரக்கையுடன் அயன்பாக்ஸின் வயரை தொட்ட போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.  இதனால் தூக்கி வீசப்பட்ட ஸ்வேதா படுகாயமடைந்தார்.  அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா....!!