மரண பயத்தை காட்டிய கண்டெய்னர் டிரைவர்... கதறிய லோடுமேன்...

விழுப்புரத்தில் தகராறு செய்த லோடுமேனை ஒருவர், லாரியில் ஏற்றி ஊர் முழுவதும் சுற்றிக் காட்டியுள்ளார்.

மரண பயத்தை காட்டிய கண்டெய்னர் டிரைவர்... கதறிய லோடுமேன்...

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் பறந்தது. புதுச்சேரி ரெட்டியார் பாளையம் வழியாக சென்ற அந்த கனகர வாகனத்தின் பின்னால் உள்ள கதவுகள் திறந்து விடப்பட்டும், டிரைவர் சீட்டின் அருகே இன்னொருவர் ஸ்பைடர் மேன் போல தொங்கிக் கொண்டிருந்தவாறும் சீறிப்பாய்ந்தது. 

இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் எவ்வளவோ கத்திக் கூப்பாடு போட்டும் வண்டியை நில்லாமல் சென்றது. ஏரில் பறந்து ஏரோப்ளேனை பிடித்த கம்மு கக்கிய ஸ்பைடர் மேனைப் போல லாரியில் ஒட்டியவாறே வேறு வழியின்றி கம்முனு நின்றார் அந்த பாவப்பட்ட லோடுமேன். 

மேலும் படிக்க | சோதனையில் பிடிபட்ட ரூ. 1.4 லட்சம் மதிப்புள்ள குட்கா...

இதையடுத்து கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் டிரைவரை நாலு தட்டி தட்டினர். ரெட்டியார் பாளையத்தில் கண்டெய்னரை நிறுத்தியபோது டிரைவருக்கும் லோடுமேனுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. 

குடிபோதையில் இருப்பதால் இப்போதைக்கு வாகனத்தை ஓட்ட வேண்டாம் என லோடுமேன் அறிவுரை கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், லோடுமேனை வெளிப்புறத்தில் தொங்க விட்டபடியே வண்டியை ஓட்டிச் சென்ற இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் தேங்காய் மட்டைகள்