வீட்டில் அடைத்து வைத்த மகள் - திருமணம் முடித்த கையோடு நீதிமன்றத்தில் தஞ்சம் - இருவரும் மேஜர் பிரச்சனை இல்ல.....

வீட்டில்  அடைத்து  வைத்த மகள் - திருமணம் முடித்த கையோடு நீதிமன்றத்தில் தஞ்சம் - இருவரும் மேஜர் பிரச்சனை இல்ல.....

காதல் பெற்றோருக்கு தெரியவந்து  வலுத்த எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி. சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் தர்ஷனி ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷணியை அவரது பெற்றோர் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | காதலர் தின எதிர்ப்பு போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!!! அப்படி என்னதான் இருக்கு காதலில் ?

என்னை காப்பாற்று காதலனிடம் கெஞ்சிய காதலி

எப்படியாவது என்னை காப்பாற்றி அழைக்க சொல்லுமாறு தர்ஷினி சந்துருவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கலந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்ஷினி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

அவரது பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளை சந்துரு அழைத்துச் சென்று விட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் பழனியில் பதிவு திருமணத்தை முடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என எண்ணி பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  இரவு தஞ்சம் அடைந்தனர்.

விசாரனையில் விருப்ப திருமணம்: 

கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட தர்ஷனியை நீதிபதி விசாரணை மேற்கொண்டதில் எனது விருப்பப்படியே சந்துருவுடன் சென்றேன் எனவும் அவரை திருமணம் செய்து கொண்டேன் எனவும் வாக்குமூலம் அளித்தார். விசாரணையின் முடிவில் தர்ஷினி மற்றும் சந்துரு ஆகியோர் மேஜர் என்பதால் அவர்களின் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதுவரையும் பல்லடம் காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். திடீரென புதுமண காதல் ஜோடிகள் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.