விருத்தாசலத்தில் கஞ்சா போதை ஆசாமிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 

விருத்தாசலத்தில் கஞ்சா போதை ஆசாமிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் இந்திய தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரத்தில் கஞ்சா போதை ஆசாமிகளால் கொல்லபட்ட இப்ராஹிம் ராஜாவிற்கு நீதி கேட்டும் கொலையாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடனடியாக தமிழக அரசு பாதிக்கபட்ட இப்ராஹீம் ராஜாவின் குடுப்பத்துக்கு நிவாரண தொகையாக 1 கோடி வழங்கக் கோரியும். அவரின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும். முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில துணை பொதுச் செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் கம்பம் முகமது சாதிக் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.