சிறப்பு பூஜைக்காக திரளாக திரண்ட பக்தர்கள் கூட்டம்...

கோவில்பட்டி காளியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

சிறப்பு பூஜைக்காக திரளாக திரண்ட பக்தர்கள் கூட்டம்...

தூத்துக்குடி | கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் தைமாத கடைசி ஞாயிறை முன்னிட்டும், உலக மக்கள் நன்மை வேண்டியும், கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | அடிப்படை வசதிகள் கூட இல்லை!!!- தஞ்சை பெரிய கோவில் குறித்து எழுந்த புகார்கள்...

ஸ்ரீ காளியம்மனுக்கு 18வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியாண்டியன், மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி...5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா...அமைச்சர் சொன்ன தகவல்!